திருவருட்பா

P Madhav Kumar



அருட் ஜோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் பொருட்சாரு மறைகளெல்லாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்தத் தெய்வம் இருட்பாடு நீக்கியொளி ஈத்தருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியாவாறு எனக்கருளும் தெய்வம் தெருட் பாடல் உவந்தெனையுஞ் சிவமாக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்


அம்பலத்தரசே அருமருந்தே


ஆனந்தத்தேனே அருள்விருந்தே


பொதுநடத்தரசே புண்ணியனே


புலவரெலாம் புகழ் கண்ணியனே


மலைதரு மகளே மட மயிலே


மதிமுக அமுதே இளங்குயிலே


ஆனந்தக் கொடியே இளம்பிடியே


அற்புதத்தேனே மலைமானே


சிவ சிவ சிவ சிவ சின்மய தேஜா


சிவ சுந்தர குஞ்சித நடராஜா


படனவிவேகா பரம்பர வேதா


நடன சபேசா சிதம்பர நாதா


அரிபிரிமாதியார் தேடிய நாதா அரகர சிவ சிவ ஆடிய பாதா


நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே


நல்ல தெலாஞ செய வல்லவனே


என்னுயிர் உடம்போடு சித்தமுதே


இனிப்பது நடராஜ புத்தமுதே


நடராஜா வள்ளலை நாடுதலே நம் தொழிலாம் விளையாடுதலே அம்பலவாணர் தம் அடியவரே


அருள் அரசாள் மணி முடியவரே


அருட் பெரும் ஜோதியைக் கண்டோமே


ஆனந்தக் தெள்ளமு துண்டோமே.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat