சமரசப் பிரார்த்தனை

P Madhav Kumar

 சமரசப் பிரார்த்தனை


கருணையும் அன்பும் நிறைந்த இறைவா! எல்லா உயிர்களிலும் ஊடுருவி, எங்கும் நிறைந்து, சர்வ வல்லமையும் பொருந்திய, சர்வக்ஞனான, சச்சிதானந்தப் பரம்பொருளாம், உம்மை வணங்கிப் பணிகின்றோம்.


மெய்ப்பொருள் காணும் உள்ளம், சமநோக்கு, நிலைபெற்ற மனம், சிரத்தை, பக்தி, ஞானம் இவைகளை எங்களுக்கு அருள்வீராக. ஆணவம், காமம், பேராசை, கோபம், வெறுப்பு இவைகளில் இருந்து, எங்களை விடுவித்து, எங்கள் உள்ளங்களில் தூய தெய்வீகக் குணங்களை நிரப்புவீராக. எல்லா உருவங்களிலும் பெயர்களிலும் உம்மையே தரிசித்து, சேவை செய்வோமாக. என்றென்றும் உமது புகழைப் பாடுவோமாக. எப்போதும் எங்களது நாவினில் உமது திருநாமம் விளங்குக. என்றென்றும் உம்முள்ளே நிலைபெற்று விளங்குவோமாக. ஓம் தத்சத்.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat