01. உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம் பாடல் வரிகள் - Uchi Pillaiyar Kovil Konda Lyrics Tamil

P Madhav Kumar
0 minute read

 உச்சி பிள்ளையார்

கோவில் கொண்ட இடம்

திருச்சி மலையினிலே


நம் அச்சம் நீங்கவும்

ஆனந்தம் பெருகவும்

அமர்ந்தார் மனதினிலே


உச்சி பிள்ளையார்

கோவில் கொண்ட இடம்

திருச்சி மலையினிலே


நம் அச்சம் நீங்கவும்

ஆனந்தம் பெருகவும்

அமர்ந்தார் மனதினிலே


சச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்

புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்

சச்சிதானந்த சர்க்குருவாகியே விமலன்

புவி தந்தையானபின் தாயுமான திரு நகரம்


அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்

அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்

எங்கள் யானை முகம் கொண்ட

ஆதி நாத்தனாம் இறைவன்


அருள் உச்சி பிள்ளையார்

கோவில் கொண்ட இடம்

திருச்சி மலையினிலே


நம் அச்சம் நீங்கவும்

ஆனந்தம் பெருகவும்

அமர்ந்தார் மனதினிலே


பாடுதலும் அடி பரவுதலும்

தொழிலாகும்

துணை நாடுதலும் அருள் நன்னுதலும்

நினைவாகும்


பாடுதலும் அடி பரவுதலும்

தொழிலாகும்

துணை நாடுதலும் அருள் நன்னுதலும்

நினைவாகும்


கூடுதலும் கரம் கூப்புதலும்

நமதெண்ணம்

கூடுதலும் கரம் கூப்புதலும்

நமதெண்ணம்

வினை ஓடுதலும் பகை ஒடுங்குதலும்

இனி திண்ணம்


அருள் உச்சி பிள்ளையார்

கோவில் கொண்ட இடம்

திருச்சி மலையினிலே


நம் அச்சம் நீங்கவும்

ஆனந்தம் பெருகவும்

அமர்ந்தார் மனதினிலே


உச்சி பிள்ளையார்

கோவில் கொண்ட இடம்

திருச்சி மலையினிலே


நம் அச்சம் நீங்கவும்

ஆனந்தம் பெருகவும்

அமர்ந்தார் மனதினிலே

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Follow Me Chat