Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം | ગુજરાતી | मराठी |

29. செவப்பு சேலை கட்டிக்கிட்டு பாடல் வரிகள் -Sivappu Selai Kattikittu Lyrics

 செவப்பு சேலை கட்டிக்கிட்டு

வேப்பிலையும் எடுத்துக்கிட்டு

வேற்காட்டு கருமாரி

ஆடி வந்தாளாம்


செவப்பு சேலை கட்டிக்கிட்டு

வேப்பிலையும் எடுத்துக்கிட்டு

வேற்காட்டு கருமாரி

ஆடி வந்தாளாம்


அவள் விருப்புடனே தொழுபவரின்

வினைகளையே ஓட வைத்து

பொறுப்புடனே நம்மை காக்க

ஆடி வந்தாளாம்


மாரியம்மா கருமாரியம்மா

மாரியம்மா கருமாரியம்மா


சிறப்புடனே பவனி வந்து

சிந்தையிலே குடி புகுந்து

சிறப்புடனே பவனி வந்து

சிந்தையிலே குடி புகுந்து

கருணை மனம் கொண்டு

நம்மை காக்க வந்தாளாம்


அவ மரகதத்தில் திலகமிட்டு

மரிக்கொழுந்து மலரெடுத்து

மரகதத்தில் திலகமிட்டு

மரிக்கொழுந்து மலரெடுத்து

சிரத்தினிலே சூடிக்கொண்டு

பவனி வந்தாளாம்


மாரியம்மா கருமாரியம்மா

மாரியம்மா கருமாரியம்மா


உன் வேப்பிலையும் திருநீரும்

வேண்டியதை தந்திடுமே அம்மா

காப்பது உன் திரிசூலம்

கவலை யாவும் தீரும் அம்மா


மாபெரும் பக்தர்கள் கூட்டம்

உன் சன்னதியில் அம்மா

ஆபத்தில் உதவிட உன் ஆயிரம்

கைகள் அணைத்திடுமே அம்மா


தொட்டியங்குளந்தன்னில் வாழும்

எங்க மகமாயி

மட்டில்லாத பாசம் கொண்ட

எங்க மகமாயி


சக்தியிலே நெருப்பெடுத்து

சதிராடும் மாரி

சக்தியிலே நெருப்பெடுத்து

சதிராடும் மாரி


கட்டி காக்கும் அன்னை

போல காத்திடுவாள் மாரி

கட்டி காக்கும் அன்னை

போல காத்திடுவாள் மாரி


செவப்பு சேலை கட்டிக்கிட்டு

வேப்பிலையும் எடுத்துக்கிட்டு

வேற்காட்டு கருமாரி

ஆடி வந்தாளாம்


அவள் விருப்புடனே தொழுபவரின்

வினைகளையே ஓட வைத்து

பொறுப்புடனே நம்மை காக்க

ஆடி வந்தாளாம்


மாரியம்மா கருமாரியம்மா

மாரியம்மா கருமாரியம்மா

கருமாரியம்மா

~~~*~~~

📢 Follow