15. சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு
Read in: తెలుగు | ಕನ್ನಡ | தமிழ் | देवनागरी | English | മലയാളം

15. சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

P Madhav Kumar

 ஓரானைக் கன்றை உமையாள் திருமகனை

போரானைக் கற்பகத்தைப் பேணினால் வாராத
புத்தி வரும் வித்தை வரும் புத்திர சம்பத்து வரும்
சத்தி தரும் சித்தி தருந்தான்

சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு பிள்ளையார்
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு அதன்
துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன்
துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார்
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

அழியாத பெருஞ்செல்வம் அவனே தில்லை
ஆனந்தக் கூத்தரின் மகனே தில்லை
ஆனந்தக் கூத்தரின் மகனே பிள்ளையார்

சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

வழியின்றி வேலனவன் திகைத்தான் குற
வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்
வழியின்றி வேலனவன் திகைத்தான் குற
வள்ளியவள் கைபிடிக்கத் துடித்தான்

மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான்
மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான் மறு
கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் மறு
கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான் பிள்ளையார்

சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை அவன்
கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும் அவன்
நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்அவன்
நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்பிள்ளையார்

சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும் வரும்
துயர் யாவும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும் அவன்
அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் அவன்
அசைந்து வர அருள் மணிகள் ஒலிக்கும் பிள்ளையார்

சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு அதன்
துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து அதன்
துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து பிள்ளையார்
சுழி போட்டுச் செயலெதுவும் தொடங்கு

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
💬 Chat 📢 Follow